கடலில் குளித்த ஊட்டி வாலிபர் அலையில் சிக்கி மாயம்

பாகூர், நவ. 8: பாகூர் அருகே கடலில் குளித்த ஊட்டி வாலிபர் அலையில் சிக்கி மாயமானார். அவரை கடலோர பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஊட்டி கோத்தகிரியை சேர்ந்த மணிகண்டன், இந்திரஜித் உள்ளிட்ட 15 பேர் தீபாவளி பண்டிகையை கொண்டாட காரில் புதுவைக்கு வந்தனர். நேற்று முன்தினம் மாலை புதுக்குப்பம் கடற்கரைக்கு சென்றனர். இந்திரஜித் (25), பிரதீப் மட்டும் கடலில் இறங்கி குளித்தனர். ஆழமான பகுதிக்கு சென்றதால் ராட்சத அலை அவர்களை இழுத்துச் சென்றது. நண்பர்கள் அவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். இதில் பிரதீப் மட்டும் காப்பாற்றப்பட்டார். உடனடியாக அவர், புதுவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

அலையில் இழுத்துச் செல்லப்பட்ட இந்திரஜித்தை மீட்க முடியவில்லை. கடலோர பாதுகாப்பு படை மற்றும் மீனவர்கள் உதவியுடன் அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: