கரூர் வேலுச்சாமிபுரத்தில் வடிகால் வசதி இல்லாததால் சுகாதார கேட்டால் அவதி

கரூர், நவ. 2: கரூர் வேலுச்சாமிபுரத்தில் வடிகால் வசதியில்லாததால் சுகாதார கேடு ஏற்படுகிறது. கரூரில் இருந்து ஈரோடு செல்லும் சாலை வேலுச்சாமிபுரத்தில் தெருக்களில் வடிகால்கள் முழுமையாக அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வரும் கழிவு நீரால் வடிகால்கள் நிறைந்து சாலையில் வழிகிறது. பல இடங்களில் அடைபட்டு கழிவுநீர் தேங்கிக்கிடக்கிறது. இதனால் கொசுக்கள் பரவி சுகாதாரகேடு ஏற்படுகிறது.

வடிகால் அடைப்பினை எடுத்து விடுவதில்லை. இதுபற்றி உள்ளாட்சி அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சுகாதார கேட்டில் இருந்து காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Related Stories: