புளியங்குடியில் இந்திரா காந்தி நினைவு தினம்

புளியங்குடி, நவ. 2: புளியங்குடி காந்தி பஜாரில், காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திரா படத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில சிறுபான்மை பிரிவு துணை தலைவர் ஸ்டீபன் ராஜ், ராஜிவ் காந்தி பஞ்சாயத்துராஜ் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் ராம்மோகன்,  இளைஞரணி மாநில துணை தலைவர் பாக்கியராஜ், ஊடகப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் கண்ணன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முகம்மது, ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன், எஸ்சி எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் லட்சுமணன், மாவட்ட பொதுச்செயலாளர் பரமசிவம், வாசுதேவநல்லூர் தொகுதி இளைஞர் காங். பொதுச்செயலாளர் வைரமூர்த்தி, நகர இளைஞர் காங். தலைவர் ராதாகிருஷ்ணன், ராகுல் காந்தி பேரவை ராமர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: