ஆலங்குளம், நவ. 2: சீதபற்பநல்லூர் அருகே உள்ள பழவூர் சின்னபிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் நாராயணன் (25). இவர், கல்லூர் அருகே உள்ள தனியார் மில்லில் லோடு ஏற்றும் பிரிவில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மில்லிற்கு அட்டைப்பெட்டி லோடு வந்துள்ளது. அதனை ஜேசிபி இயந்திரம் மூலம் இறக்கும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக நடந்து சென்ற நாராயணன் மீது அட்டை பெட்டி விழுந்தது.