திசையன்விளையில் புதிய துணை மின் நிலைய கட்டுப்பாட்டு கருவி இயக்கம்

திசையன்விளை, நவ. 2: திசையன்விளை - உடன்குடி சாலையில் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையத்தில் 110க்கு 33 கிலோ வாட்ஸ் கட்டுப்பாட்டு கருவியை இன்பதுரை எம்எல்ஏ துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வள்ளியூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராஜன்ராஜ்  (விநியோகம்), திசையன்விளை உதவி செயற்பொறியாளர் சிவராஜன் (விநியோகம்), உதவி மின்பொறியாளர் கார்த்திக் (விநியோகம்), பிஎஸ்என்எல் துணை கோட்ட பொறியாளர் ரமேஷ், அதிமுக ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, நவ்வலடி சரவணகுமார், மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் ரமேஷ், நகர செயலாளர் சுடலைமணி, பயணிகள் நலச்சங்க பொறுப்பாளர்கள் சாலமோன் ஜவகர், பிரைட், பணகுடி முன்னாள் பஞ். தலைவர் லாரன்ஸ், முருகேசன், தவசிமுத்து, கல்யாணசுந்தரம், பாபாதனசிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: