பல்கலைக்கழக விளையாட்டு போட்டி திருவள்ளுவர் கல்லூரி சாதனை

வி.கே.புரம், நவ. 2:  நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். மாணவர்களுக்கான பளுதூக்கும் போட்டியில் சக்திவேல், மாணவிகளுக்கான போட்டியில் இசைச்செல்வி தங்கமும், தடகளப் போட்டில் மாணவர் சங்கர் கோலூன்றி தாண்டும் போட்டியில் தங்கமும் வென்றனர். 21 கிமீ மாரத்தான் போட்டியில் மாணவி துர்காதேவி வெண்கலமும். 10 கிமீ கிராஸ்கண்டரி போட்டியில் மாணவிகள் துர்காதேவி, பார்வதி, இந்திரா காந்தி, திருமலை தீபா, காயத்ரி கொண்ட குழுவினர் சாம்பியன் ஷிப்பில் 4ம் இடமும் பிடித்தனர்.

மாவட்ட பளுதூக்கும் போட்டியில் மாணவர் சக்திவேல் வெண்கல பதக்கமும், மாணவிகள் துர்காதேவி, திவ்யலட்சுமி, இலக்கியா, இந்திரா காந்தி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டமும் வென்றனர். தனிநபர் சாம்பியன் பட்டத்தை மாணவி இசைச்செல்வி பெற்றார். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை கல்லூரி நிர்வாகத்தினரும், முதல்வர் சுந்தரம், நிர்வாக அதிகாரி நடராஜன், சுயநிதி பாடப்பிரிவு இயக்குநர் அழகப்பன், கல்லூரி பிஆர்ஓ போராசிரியர் கார்த்திகேயன் ஆகியோர் பாராட்டினர்.

Related Stories: