வி.கே.புரம், நவ. 2: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். மாணவர்களுக்கான பளுதூக்கும் போட்டியில் சக்திவேல், மாணவிகளுக்கான போட்டியில் இசைச்செல்வி தங்கமும், தடகளப் போட்டில் மாணவர் சங்கர் கோலூன்றி தாண்டும் போட்டியில் தங்கமும் வென்றனர். 21 கிமீ மாரத்தான் போட்டியில் மாணவி துர்காதேவி வெண்கலமும். 10 கிமீ கிராஸ்கண்டரி போட்டியில் மாணவிகள் துர்காதேவி, பார்வதி, இந்திரா காந்தி, திருமலை தீபா, காயத்ரி கொண்ட குழுவினர் சாம்பியன் ஷிப்பில் 4ம் இடமும் பிடித்தனர்.