வி.கே.புரத்தில் இந்திய தேசிய லீக் ஆலோசனை கூட்டம்

வி.கே.புரம், நவ. 2:  வி.கே.புரத்தில் இந்திய தேசிய லீக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தென்மண்டல அமைப்பு செயலாளர் செய்யது அலி தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் சுலைமான் சேட் முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட தலைவர் காதர் பாட்சா வரவேற்றார்.

கூட்டத்தில், சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். பாபநாசம் தலையணையில் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். சிறைகளில் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் கைதிகளாக இருந்துவரும் 44 முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில பொதுச்செயலாளர் ராஜா உசேன், நகர தலைவர் மைதீன், செயலாளர் ஷேக் மைதீன், பொருளாளர் ஷா நவாஸ், தென்மண்டல முன்னாள் அமைப்பு செயலாளர் செய்யது அலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: