வி.கே.புரம் நகராட்சி சுவரில் ஆபாச சுவரொட்டி ஒட்டியவர் கைது

வி.கே.புரம், நவ. 2:  அம்பை திரையரங்கில் ‘சிந்து சமவெளி’ என்ற திரைப்படம் திரையிடப்பட்டு உள்ளது. இந்த படத்தின் ஆபாச காட்சி தொடர்பான சுவரொட்டி, வி.கே.புரம் நகராட்சிக்கு சொந்தமான பயணிகள் அமரும் இடத்தில் ஒட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து வி.கே.புரம் போலீசில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் புகார் செய்தார். எஸ்ஐ மாரியப்பன் வழக்கு பதிந்து, சிவந்திபுரம் எம்ஜிஆர் தங்கநகரைச் சேர்ந்த முத்தையா மகன் இசக்கியை (35) கைது செய்தார்.

Related Stories: