திமுக சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்

சேந்தமங்கலம், நவ.2:  புதன்சந்தையில் திமுக சார்பில், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. புதுச்சத்திரம் தெற்கு ஒன்றிய திமுக மற்றும் மாவட்ட மருத்துவர்  அணி சார்பில், புதன்சந்தை பேருந்து நிறுத்தத்தில் நிலவேம்பு குடிநீர்  வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய பொறுப்பாளர் துரை ராமசாமி தலைமை  தாங்கினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்திசெல்வன்  கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் டெங்கு,  பன்றிக்காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கினார்.   இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் சுப்ரமணி, மாவட்ட மருத்துவ அணி  அமைப்பாளர் ராஜேஷ்பாபு, துணை அமைப்பாளர்கள் மதிவேந்தன், நிர்வாகிகள்  குப்புசாமி, நல்லுசாமி, சண்முகம், அண்ணாதுரை, பொன்னுசாமி, ராஜகோபால்,  ராஜேந்திரன், இளைஞரணி அமைப்பாளர் சரவணன் உட்பட பலா கலந்து கொண்டனர்.ராசிபுரம்: ராசிபுரம் அரசு மருத்துவமனையில்,  கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்திசெல்வன், பொதுமக்களுக்கு நிலவேம்பு  குடிநீர் வழங்கினார். நிகழ்ச்சியில், நகர செயலாளர் சங்கர், மாவட்ட பொருளாளர் செல்வம், ஒன்றிய  செயலாளர்கள் ஜெகநாதன், கௌதம், நிர்வாகிகள் அமிர்தலிங்கம்,  நாகேஸ்வரன், ஆனந்த், ரவிச்சந்திரன், ரங்கசாமி, அழகரசு, வனிதா  செங்கோட்டையன், ராணா ஆனந்த், பாலு, மோகன்தாஸ், கார்த்திக், சதீஷ், கேசவன்,  ரவி, ராஜம்மாள், பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மோகனூர்: மோகனூரில், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் சுகுமார் தலைமையில், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் ராஜேஷ்பாபு, பேரூர் செயலாளர் செல்லவேல், ஒன்றிய பொறுப்பாளர் முத்துசாமி மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். 

Related Stories: