தீபாவளி போனஸ் கோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், நவ.2:  தீபாவளி போனஸ் வழங்கக்கோரி, நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல்லில்  108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்ட தலைவர் தனபால் தலைமை வகித்து பேசினார். 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு 30 சதவீத தீபாவளி போனஸ் அளிக்க வேண்டும்.  ஈட்டிய விடுப்பு தொகையை உடனே வழங்க வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி,  இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்,  கோவை மண்டல பொறுப்பாளர்  சிவக்குமார், மண்டல தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் கோரிக்கையை விளக்கி  பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர்,  பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களை  சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: