சேந்தமங்கலம், நவ.2: சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை, சேந்தமங்கலம் விவேகா மெட்ரிக் பள்ளியில் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டது. சேந்தமங்கலம் அடுத்த பொன்னமாபுதூர் விவேகா மெட்ரிக்குலேசன் பள்ளியில், சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள், தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் பாண்டுரங்க குப்தா முன்னிலை வகித்தார். இதில் சாதார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை, தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுவதற்கான காரணம் மற்றும் அவருக்கு குஜராத் மாநிலத்தில் உலகிலேயே மிகப்பெரிய சிலை நிறுவப்பட்டது குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கிடையே விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் சுமதி, ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.