காரைக்கால் துணை மின்நிலையத்திற்கு மின்சாரம் பெறும் பணி விரைவில் முடியும்

காரைக்கால், நவ. 2: புதுச்சேரி அரசு சார்பில், 64 வது விடுதலை நாள் விழா, நேற்று காரைக்கால் கடற்கரை சாலையில் நடைபெற்றது. அமைச்சர் கமலக்கண்ணன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் கலெக்டர் கேசவன், போலீஸ் எஸ்.பிக்கள் மாரிமுத்து, வம்சிதரரெட்டி  மற்றும் தியாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, அமைச்சர் கமலக்கண்ணன் சமாதான புறாவை பறக்கவிட்டு பேசியதாவது:  பிரிட்டிஷ் இந்தியப்பகுதியில் காந்திஜி தலைமையில் சுதந்திரப்போராட்டம் தீவிரமடைந்தபோது, புதுச்சேரியிலும் சுதந்திரப்போராட்டம் தொடங்கியது. பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பிறகு, 1954 நவம்பர் 1ம் தேதி புதுச்சேரி மாநிலம் அதிகாரப்பூர்வமாக இந்தியாவுடன் இணைந்தது. அந்த நாளைதான் நாம் புதுச்சேரி விடுதலை நாளாக கொண்டாடுகிறோம்.   நெய்வேலியிலிருந்து காரைக்கால் துணை மின்நிலையத்திற்கு நேரடியாக மின்சாரம் பெறும் பணி விரைவில் முடியவுள்ளது. இதன்மூலம் தமிழகத்திலிருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வதை தவிர்த்து, குறைவான விலையில் மின்சாரம் வழங்க வாய்ப்பு உருவாகியுள்ளது. காரைக்காலில், அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், தரத்தை உயர்த்தவும் முயற்சிகள் எடுத்துள்ளோம். மேலும், கல்வித்துறையில் மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரில் முதுகலை பட்ட மேற்படிப்பு நிறுவனம் ஒன்று இந்த ஆண்டு நிறுவப்படவுள்ளது. சுகாதாரத்துறை மூலம் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறோம். இதன்மூலம் நடப்பு ஆண்டு டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது. என்றார். தொடர்ந்து, தியாகிகளுக்கு அமைச்சர் கதராடை போர்த்தி கவரவித்தார்.

Related Stories: