மின்சார சிக்கன விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேப்பூர், நவ. 2: வேப்பூர் ப்ரைம் இண்டர்நேஷ்னல் பள்ளியில் மின்சார சிக்கனம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வேப்பூர் உதவி செயற்பொறியாளர் குமரேசன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் பாலக்கிருஷ்ணன், பொருளாளர் திருவாசகமணி, முதல்வர் மேத்திவ் ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் அய்யப்பன் வரவேற்றார். திட்டக்குடி செயற்பொறியாளர் சரவணதுரை மோகன் சிறப்புரையாற்றினார். மின்நிலைய ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், மின்சார சிக்கனம், முக்கியத்துவம், பாதுகாப்பாக பயன்படுத்துவது, விபத்துகளை தவிர்க்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாணவர்

களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Related Stories: