ஏற்காடு, நவ.1: ஏற்காட்டில், கிணற்றில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்காடு போட்டுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகள் கீர்த்திகா(14). அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை வீட்டாருகே கிணற்றில் தண்ணீர் இறைத்து கொண்டிருந்தார். அப்போது, ராட்டினம் நழுவி விழுந்த போது, கால் தவறி மாணவியும் கிணற்றில் விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் கிணற்றில் குதித்து, மாணவியை மீட்டு ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவியை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என தெரிவித்தார். இது குறித்து ஏற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.