ஜெயங்கொண்டம், நவ. 1: தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்க அலுவலர்களுக்கு இணையான அடிப்படை ஊதியம் ரூ.15,700 கிராம உதவியாளர்களுக்கு வழங்க வேண்டும். காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் போன்று கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் கணக்கீடு செய்து வழங்க வேண்டும். காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் போனஸ் ரூ.3,500 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் நேற்று வேலைநிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க மாவட்ட தலைவர் குப்புசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் குமணன் துவக்கி வைத்தார். கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் பாக்கியராஜ் சிறப்புரையாற்றினார். வட்ட தலைவர் அமிர்தலிங்கம்,