பெரம்பலூர், நவ. 1: பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் நன்னை கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்க நன்னை (மேற்கு) கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு ரூ.3.02 கோடிக்கு மதிப்பீடு ஒப்புதலாகி பணி நிறைவு பெற்றதால் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. நன்னை கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால் நன்னை, வேப்பூர், ஓலைப்பாடி, கல்லை, அந்தூர், கிளியூர், பரவாய், கிழுமத்தூர், வடக்கலூர், எழுமூர், ஆண்டிகுரும்பலூர் மற்றும் வரகூர் கிராம பகுதிகளுக்கு சீரான மின்சாரம் வழங்கப்படுவதோடு மங்களமேடு துணை மின் நிலையத்தில் தற்போதுள்ள மின்பளு குறைக்கப்பட்டு அந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வழங்கப்படும் மற்ற கிராம பகுதிகளுக்கும் சீரான மின்சாரம் வழங்கப்படும்.