வீட்டு கதவை திறந்து வைத்து தூங்கிய தாய், மகளிடம் 10 பவுன் நகை கொள்ளைஅரியலூர் அருகே

அரியலூர், நவ. 1:  அரியலூர் அருகே வீட்டு கதவை திறந்து வைத்து தூங்கிய தாய், மகளிடம் 10 பவுன் நகையை பறித்து சென்ற மர்மபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரியலூர் அருகே உள்ள வாரணவாசி கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி மனைவி மகாலட்சுமி (45). இவரது மகள் இலக்கியா (26). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினர். நள்ளிரவில் மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து தூங்கி கொண்டிருந்த மகாலட்சுமி கழுத்தில் இருந்து 4 பவுன் தாலிச்செயினை பறித்தனர். அப்போது கண்விழித்து ஜெயினை பிடித்து கொண்டு மகாலட்சுமி போராடினார். அப்போது மகாலட்சுமி கழுத்தை பிடித்து மர்மநபர் அழுத்தி செயினை பறித்தார். இதையடுத்து இலக்கியா அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்து கொண்டு மர்மநபர்கள் தப்பினர்.

இதுகுறித்து கீழப்பழூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோ மோதி தொழிலாளி படுகாயம்: அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே காத்தான்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன் (50). இவர் விளங்குடியில் மெயின் ரோடு ஜெயங்கொண்டம்- அரியலூர் சாலையை கடந்தார். அப்போது அந்த வழியாக வந்த கீழமிக்கல்பட்டியை சேர்ந்த சிமியோன்ராஜ் (51) என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ, காசிநாதன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சாமிநாதனை மீட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிந்து ஆட்டோ டிரைவர் சிமியோன்ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: