பெரம்பலூரில் விவசாயிகள் சங்கத்தினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை போராட்டம்

பெரம்பலூர், நவ.1: பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயிலில் தமிழக விவசாயிகள் சங்க நிறுவனர் தலைவர் நாராயணசாமி நாயுடு சிலையை மறைத்து அரசியல், வர்த்தக விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்றக்கோரி  பலமுறை வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று நாராயணசாமி நாயுடு சிலையை மறைந்து டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததால் அதனை அகற்ற வலியுறுத்தியும், பேனர்கள் வைக்க அனுமதித்திருப்பதை கண்டித்தும் தமிழக விவசாயிகள் சங்கத்தினர், அதன் மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமையில் பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Related Stories: