எறையூரில் கரும்பு விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், நவ.1: கரும்பு பாக்கிப்பணம் ரூ.31.93 கோடி வழங்க வேண்டும், பெரம்பலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (1ம்தேதி) எறையூரில் நடக்கிறது. பொதுத்துறை, கூட்டுறவுத்துறை ஆலைகளுக்கான கரும்பு பாக்கி பணம் ரூ.228 கோடியையும், பெரம்பலூர் எறையூர் நேரு பொதுத்துறை சர்க்கரைஆலை கரும்பு வெட்டியனுப்பிய விவசாயிகளுக்குத் தரவேண்டிய கரும்பு பாக்கி ரூ.31.93 கோடியை வழங்கிட வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். வேளாண் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக இன்று எறையூர் சர்க்கரை ஆலையின் முன்பு மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

Related Stories: