பெரம்பலூர், நவ.1: பெரம்ப லூர் வட்டார வளமையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் சார்பாக, மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு, மூளைக்காய்ச்சல் பற்றிய 2 நாள் விழிப்புணர்வுப் பயிற்சி நேற்று தொடங்கியது. பெரம்பலூர் மாவட்ட, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டம், பெரம்பலூர் வட் டார வளமையத்திற்குட்பட்ட மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மூளைக்காய்ச்சல் விழிப்புணர்வு பற்றிய 2 நாள் பயிற்சிகள் நேற்று (31ம் தேதி) துவங்கி இன்று (1ம் தேதி) பெரம்பலூர் வட்டார வளமையத்தில் நடக்கிறது. இதற்கான பயிற்சியை நேற்று பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருளரங்கன் தொடங்கி வைத்து, ஆலோசனைகள் வழங்கினார். உதவி மாவட்டத் திட்ட அலுவலர் ராஜா முன்னிலை வகித்து, மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சியின் அவசியம் குறித்து விளக்கினார். இதில் சிறப்பு கருத்தா ளர்களாக மாவட்ட மருத்துவ பயிற்சி அலுவலர் சிவா, மூளைக் காய்ச்சல் பரவும்விதம், தடுக்கும் முறைகள், சிகிச்சை பெறுதல், கொசுக்களால் ஏற்படும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடல் மூலம் பயிற்சி அளித்தார்.