சாத்தூர், நவ. 1: சாத்தூர் ஒன்றியத்தில் தனிநபர் கழிவறை திட்டம் அரைகுறையாக நிற்பதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். விருதுநகர் மாட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், 48 கிராம ஊராட்சிகளில், 150 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தி வந்தனர். இதனைப் போக்க முழுசுகாதார இயக்க திட்டம் மூலம், ரூ.12 ஆயிரம் மானியத்தில் கிராமங்களில், தனிநபர் கழிவறைகள் கட்டப்பட்டன. கழிவறைகளின் கட்டுமானப் பணி, ஊராட்சி செயலர்கள் பரிந்துரை செய்யும் நபர்களுக்கே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.