தேனி, நவ. 1: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்பக்கவுண்டன்பட்டியை சேர்ந்த விவசாயிகள் சிலர், தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கனிம வளத்துறை உதவி இயக்குநர் அலுவலத்திற்கு வந்தனர். அங்குள்ளஅதிகாரிகளிடம், தங்களுக்கு மணல் கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்து கடிதம் வந்துள்ளது. அதில், எங்கள் நிலங்களில் மணல் அள்ளப்படுவதாகவும், இதனால் எங்களது பட்டாக்கள் ரத்து செய்யப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் எங்கள் நிலங்களில் மொச்சை, தட்டைப்பயிறு போன்ற தானியங்களை பயிர்செய்து வருகிறோம் என்று தெரிவித்தனர். இதனைக்கேட்ட கனிமவளத் துறை அதிகாரிகள் அந்த கடிதத்தை நாங்கள் அனுப்பவில்லை என்று விவசாயிகளிடம் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து விவசாயி அரசு கூறுகையில், ``எங்கள் பகுதியை சேர்ந்த 25 விவசாயிகள் தற்போது தட்டை மற்றும் மொச்சைப்பயறு சாகுபடியில் ஈடுபட்டுள்ளோம்.