நாட்றம்பள்ளி, நவ.1:நாட்றம்பள்ளி அருகே நேற்று அதிகாலை முன்னால் சென்ற லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 2 டிரைவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.சென்னையில் இருந்து நேற்றுமுன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் 20 பயணிகளுடன் ஒரு தனியார் சொகுசு பஸ் பெங்களூருவிற்கு புறப்பட்டது. இதில் ஒரு டிரைவரும், மாற்று டிரைவர் ஒருவரும் பணியில் இருந்தனர். நேற்று அதிகாலை 3.45 மணியளவில் வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தேசிய ெநடுஞ்சாலையில் சென்றபோது, முன்னால் நிலக்கரி ஏற்றிச்சென்ற லாரி மீது சொகுசு பஸ் எதிர்பாராமல் மோதியது.இதில் பஸ்சின் முன்பகுதி அப்பளம்போல நொறுங்கியது. அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். பஸ் விபத்தில் சிக்கியதும் அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டனர். அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள், நாட்றம்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதில் பஸ் டிரைவர்கள் 2 பேரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.