இடைப்பாடி, அக்.31: இடைப்பாடி அருகே, விற்பனைக்காக குவித்து வைத்திருந்த 27 யூனிட் கடத்தல் மணலை அதிகாரிகள் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
இடைப்பாடி அருகே சரபங்கா ஆற்று படுகையில் பொக்லைன் மூலம் மணல் எடுத்து, புதுப்பாளையம் ஊராட்சி பகுதியில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், இடைப்பாடி தாசில்தார் கேசவன் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர், 9 லாரிகளில் கொண்டு வந்து குவித்து வைக்கப்பட்டிருந்த 27 யூனிட் மணலை வருவாய்த்துறையினர் கைப்பற்றினர். இதுகுறித்த புகாரின்பேரில், மணல் கடத்தலில் தொடர்புடைய ஆசாமிகளை இடைப்பாடி போலீசார் தேடி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர்.