சேலம் பை-பாஸ் சாலையில் பரபரப்பு தீக்காயத்துடன் நடுரோட்டில் தவித்த வடமாநில தொழிலாளி

சேலம், அக்.31:  சேலம் எருமாபாளையம் வழியே ெசல்லும் சென்னை ைப-பாஸ் சாலையில், காமராஜர் சிலை அருகே நேற்று காலை 6 மணியளவில், வட மாநிலத்தை சேர்ந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர், உடலில் தீக்காயங்களுடன் வந்து நின்றார். அவர், திடீரென சாலையில் நின்றபடி உடற்பயிற்சிகளை செய்தார். பின்னர், அங்கிருந்த கடைகளில் பசிக்கிறது என வயிற்றை காட்டி, உணவு வாங்கி சாப்பிட்டுள்ளார். உடல் முழுவதும் பரவலாக தீக்காயம் இருந்ததால், அங்கிருந்தவர்கள் பீதியடைந்தனர். உடனே 108 ஆம்புலன்சை வரவழைத்தனர். அவர்கள், தீக்காயமடைந்தவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தான் யார் என்ற விவரத்தையும், எப்படி தீக்காயம் ஏற்பட்டது என்பதையும் அவர் தெரிவிக்க மறுத்து வருகிறார். இதுபற்றி கிச்சிப்பாளையம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த நபர் மீது யாராவது தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனரா? அல்லது தீ விபத்தில் சிக்கி காயமடைந்தாரா? என்பது பற்றி தீவிரமாக விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: