வருங்கால வைப்பு நிதி குறைதீர் கூட்டம்

சேலம், அக். 31: லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, சேலம் ஸ்வர்ணபுரி அண்ணாசாலையில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் வரும் 2ம் தேதி சிறப்பு குறைதீர் கூட்டம் நடக்கிறது. மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் ஹிமான்ஷீகுமார் தலைமை வகிக்கிறார்.இதேபோல், அதே தேதியில் (2ம் தேதி) ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில், உதவி வருங்கால வைப்பு நிதி அணையாளர் சிசுபாலன் தலைமையிலும், கிருஷ்ணகிரி கூட்டுறவு காலனியில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில், உதவி வருங்கால வைப்பு நிதி அணையாளர் வெற்றிச்செல்வன் தலைமையிலும் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இந்த குறைதீர் கூட்டத்தை தொழிலாளர்கள், தொழிலதிபர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் ஹிமான்ஷீகுமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: