கூட்ட முடிவில் ஒன்றிய தலைவர் டேவிட் நன்றி கூறினார். தூக்கிட்டு பெண் தற்கொலை

ஜெயங்கொண்டம்,அக்.30: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கத்தாழை கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன். இவரது மகள் வள்ளிக்கொடி (28). இவருக்கும் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பிள்ளைபாளையம் கிராமத்தை சேர்ந்த சுந்தரேசன் மகன் ஐயப்பன் என்பவருக்கும் கடந்த 2009ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லை. கடலூர், நெய்வேலி, விருத்தாசலம் உள்ளிட்ட பல ஊர்களில் குழந்தை பாக்கியம் வேண்டும் என்பதற்காக மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுவந்தார். இதனால் மனவேதனையில் தனது தாய் விஜயாவிடம் பணம் மட்டுமே செலவாகிறது, குழந்தை இல்லையென மிகுந்த மனவேதனையில் கூறி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு கொண்டுள்ளார். அவரை காப்பாற்றி மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே வள்ளிக்கொடி இறந்து விட்டார். இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: