செந்துறை,அக்.30; செந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு ஆர்ஏஎஸ் மூலமாக அறிவியல் மனப்பான்மை வாரமாக செந்துறை சுற்றியுள்ள பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக நீரின் தன்மையை அறியும் சோதனை பயிற்சி துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரியலூர் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி பயிற்சியினை துவக்கி வைத்தார், கல்வி மாவட்ட அலுவலர் வெற்றிச்செல்வி (பொ), இடைநிலைக்கல்வி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் காந்தி, ஆசிரியர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் குணசேகரன், தலைமையாசிரியர் விஜயராகவன், அறிவியல் ஆசிரியை இந்திரா மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், அன்னை தெரசா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.