திருவண்ணாமலை, அக்.31: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று 2வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 750 சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். மாணவர்களுக்கு சுயஉதவி குழுவினர் சத்துணவு சமைத்தனர்.தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர், சத்துணவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25ம் தேதி முதல் அந்தந்த கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், அரசு சார்பில் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தாததால் காத்திருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்று, கடந்த 29ம் தேதி சத்துணவு ஊழியர் வேலையை புறக்கணித்து தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து நேற்றுமுன்தினம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த இரண்டாவது நாள் போராட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அல்போன்ஸ் தலைமை தாங்கினார்.