கங்கைகொண்டசோழபுரத்தில பவுர்ணமி கிரிவலம்

ஜெயங்கொண்டம்,அக்,26: ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் கடந்த 2015 நவம்பர் 25ம்தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. திருப்பனந்தாள் காசிமடாதிபதி முத்துக்குமாரசாமி தம்பிரான் கிரிவலத்தை துவக்கி வைத்துள்ளார். கிரிவலத்தை முன்னிட்டு 3 மணிக்கு கணக்கவிநாயகருக்கு அபிஷேகம், 4.30 மணிக்கு பிரகதீஸ்வரருக்கு சந்தனம், பால், திரவியப்பொடி, மாவுப்பொடி, பஞ்சாமிர்தம், இளநீர், தேன் உள்ளிட்ட பலவகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு சிவனடியார்களால் தேவாரம், திருவாசகம் பாடப்பட்டது. அதன்பின் பிரகதீஸ்வரர் முன்னின்று தீபஒளிஏற்றி கோயில் சுற்றி உள்ள கிராமங்களான குறுக்கள்தெரு கணக்கவிநாயகர் கோயில் வழியாக மீண்டும் கோயில்வந்து பின்னர் பிரகாரம் வலம்வந்து அங்கு சிறப்பு அபிஷேகம்,ஆராதணை நடைபெற்றது. கிரிவலத்தில் ஏராளமான சிவனடியார்கள் உள்ளிட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: