புதுக்குறிச்சி பகுதியில் இன்று மின்நிறுத்தம்

பெரம்பலூர்,அக்.26: புதுக்குறிச்சி பகுதியில் இன்று (26ம் தேதி) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என உதவி செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுக்கா, புதுக்குறிச்சி துணைமின் நிலையத்தில் இன்று (26ம்தேதி) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், எஸ்.குடிகாடு, தெற்குமாதவி, கொளக்காநத்தம், அயினாபுரம், சாத்தனூர், வரகுபாடி, நல்லூர், அ.குடிகாடு, அணைப்பாடி, பாடாலூர், இரூர், தெரணிபாளையம், தெரணி, திருவிளக்குறிச்சி, ஆலத்தூர்கேட், ஆவின் பால்பண்ணை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: