கோயில் நிலங்களை மீட்காத அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து இந்து முன்னணியினர் போராட்டம்

ஜெயங்கொண்டம்,அக்.26: அரியலூர் மாவட்டம் கூவத்தூர் கிராமத்தில் விசுவநாதர் கோயில் நிலத்தை மீட்காத இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து மற்றும் அதற்கு ஆதரவாக செயல்படும் அரசு மற்றும் அதிகாரிகளை கண்டித்தும் இந்து முன்னணி சார்பில் ஜெயங்கொண்டம் பெருமாள் கோயில் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கூவத்தூர் இந்து முன்னணி கிளை தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், மாவட்ட செயலாளர் திருமூர்த்தி, மாவட்ட துணை தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் பழனிசாமி, திருச்சி கோட்ட செயலாளர் குணசேகரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஐயம்பெருமாள், செந்துறை ஒன்றிய தலைவர் சத்திய பிரகாஷ் உட்பட நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக ஜெயங்கொண்டம் நகர தலைவர் மணிகண்டன் வரவேற்றார். இறுதியில் ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் மனோகர் நன்றி கூறினார்.

Related Stories: