அரியலூர்,அக்.26: அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(31). இவரது உறவினர் மணிவண்ணன்(27). இவர்கள் இருவரும் பைக்கில் வி.கைகாட்டியில் இருந்து ஜெயங்கொண்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது நாச்சியார்பேட்டை பஸ்நிலையம் அருகே மணிவண்ணன், மணிகண்டன் பைக்கை மறித்த 6 மர்ம நபர்கள் மணிகண்டனை அரிவாளால் வெட்டியுள்ளனர். பின்னர் 2 பேரும் கூச்சலிட்டபோது அருகில் இருந்த பொதுமக்கள் ஓடிவரவே 6 மர்ம நபர்களும் தப்பி ஓடிவிட்டனர்.