ஜெயங்கொண்டம் அருகே பைக்கில் சென்ற வாலிபருக்கு வெட்டு மர்ம நபர்களுக்கு வலை

அரியலூர்,அக்.26: அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(31). இவரது உறவினர் மணிவண்ணன்(27). இவர்கள் இருவரும் பைக்கில் வி.கைகாட்டியில் இருந்து ஜெயங்கொண்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது நாச்சியார்பேட்டை பஸ்நிலையம் அருகே மணிவண்ணன், மணிகண்டன் பைக்கை மறித்த 6 மர்ம நபர்கள் மணிகண்டனை அரிவாளால் வெட்டியுள்ளனர். பின்னர் 2 பேரும் கூச்சலிட்டபோது அருகில் இருந்த பொதுமக்கள் ஓடிவரவே 6 மர்ம நபர்களும் தப்பி ஓடிவிட்டனர்.

இதில் படுகாயமடைந்த மணிகண்டனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது குறித்து உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: