வாலிபர், தாய் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு சிறுமியை திருமணம் செய்த

திருவண்ணாமலை, அக்.26: திருவண்ணாமலை அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மற்றும் உடந்தையாக இருந்த அவரது தாய் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை அருகே உள்ள பொன்னங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(23), இவர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு டிராக்டரில் உழவு ஓட்ட அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த 17 சிறுமியுடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டதாம். இந்தநிலையில் மணிகண்டன் கடந்த மே மாதம் 6ம் தேதி சிறுமியை செஞ்சிக்கு அழைத்து சென்று ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து தனது வீட்டிற்கு அழைத்து வந்து குடும்ப நடத்தி வந்துள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட சிறுமி குழந்தை நல பாதுகாப்பு மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி சிறுமியை மீட்டு திருவண்ணாமலையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் சேர்த்தனர்.

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று முன்தினம் இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி விசாரித்து மணிகண்டன் மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்ததாக அவரது தாயார் முனியம்மாள் ஆகிய 2 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: