பொட்டவெளியில் நாளை வருவாய் திட்ட முகாம்

அரியலூர், அக். 25: அரியலூர் மாவட்டத்தில் வருவாய் திட்ட முகாம் நாளை நடக்கிறது.

அதன்படி அரியலூர் வட்டத்தில் பொட்டவெளி, கோவில் எசனை (மே) ஆகிய கிராமங்களிலும், உடையார்பாளையம் வட்டத்தில் அங்கராயநல்லூர் (மே), சோழமாதேவி ஆகிய கிராமங்களிலும், செந்துறை வட்டத்தில் பொன்பரப்பி கிராமத்திலும், ஆண்டிமடம் வட்டத்தில் காட்டாத்தூர் (வ) கிராமத்திலும் வருவாய் திட்ட முகாம் நாளை (26ம் தேதி) நடக்கிறது.

முகாமில் வருவாய்த்துறையின் சமூக பாதுகாப்பு திட்டங்கள், இலவச வீட்டுமனை பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். இத்தகவலை கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Related Stories: