அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு செங்கம் திருவள்ளுவர் நகரில்

செங்கம், அக்.25: செங்கம் டவுன் திருவள்ளுவர் நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.செங்கம் டவுன், திருவள்ளுவர் நகர், 15வது வார்டில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தெருவிளக்கு, குடிநீர், கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலதடவை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை, புதுச்சேரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளுவர் நகரில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த செங்கம் போலீசார், பேரூராட்சி தலைமை எழுத்தர் ரமேஷ் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள், அப்பகுதிக்கு தேவையான தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் விரைவில் செய்து தரப்படும் என உறுதியளித்தனர். அதன்பேரில், மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செங்கம் டவுன் திருவள்ளுவர் நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நேற்று, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Related Stories: