அரியலுர்,அக்,23: அரியலூர் மாவட்டத்தில் “விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்” வருகின்ற 25ம் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில், விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.