இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

சென்னை: தமிழகம் முழுவதும் 39 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆர்.விநாயகம், சென்னை எஸ்.சி.ஆர்.பி பிரிவில் பணியாற்றிய எஸ்.பூசைதுரை, சிவகங்கை மாவட்ட கல்லால் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த எம்.முகமது பரக்கத்துல்லா, வேலூர் மாவட்ட ஐ.பி.ஆர்.இ.சி பிரிவில் பணியாற்றிய பி.தரணிபாய், வேலூர் மாவட்ட என்.ஐ.பி.சி.ஐ.டியில் பணியாற்றிய என்.கோகிலா, கேளம்பாக்கம் காவல் நிலையத்தை சேர்ந்த கே.சந்திரசேகரன், டி.புஷ்பம்(டி.என்.பி.ஏ), நாகப்பட்டினம் மாவட்டத்தில் பணியாற்றி வரும் ஆர்.காமாட்சி ஆகியோர் சென்னை மாநகர காவல் துறையில் பல்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் தமிழகம் முழுவதும் 39 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: