சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 17 பேருக்கு ெடங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து மண்டல அதிகாரிகளுடன் துணை ஆணையர் ( சுகாதாரம் ) மதுசூதன் ரெட்டி, மாநகராட்சி சுகாதார அலுவலர் செந்தில்தான் ஆகியோர் ஆலோனை நடத்தினர். இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு முகாம்களை மக்கள் அதிகம் கூடும் இடங்களான பிராட்வே, சென்ட்ரல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்த உத்தரவிட்டுள்ளோம். மண்டலங்களில் உள்ள சுகாதார ஆய்வாளர்களை அனைத்து கட்டிங்களுக்கு சென்று ஆய்வு நடத்துவார்கள். இதனைத் தவிர்த்து வீடு வீடாக சென்றும் ஆய்வு நடத்துவார்கள். அப்படி செல்லும் போது தண்ணீர் மற்றும் பழைய பொருட்கள் தேங்கயிருப்பது தெரிந்தால் அதை உடனடியாக அப்புறப்படுத்துவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்.