தேசியவாத காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

திருச்செந்தூர், அக். 17: திருச்செந்தூரில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்செந்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள வடிகால் வாய்க்காலை தூர்வாரி கான்கிரிட் தளம் மூலம் புதுப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்செந்தூரில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ஆனந்தகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தர்மலிங்கம், மாவட்ட துணைத்தலைவர் சாம்ராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் பொன்ராஜ் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஏஐயூஎப் நகர செயலாளர் சண்முகம் மற்றும் முகிலன், முத்தையா, பெரியவாணன், கிருஷ்ணன், தங்கராஜா, மாரிகிருஷ்ணன், பட்டுராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: