வாசுதேவநல்லூரில் கட்டபொம்மனுக்கு மரியாதை

சிவகிரி, அக். 17:  வாசுதேவநல்லூரில் விடுதலை போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 219வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்குள்ள மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கட்டபொம்மன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை தலைவர் நாகராஜன், நிர்வாகிகள் முருகேசன், குட்டியப்பன், திருப்பதி, கட்டபொம்மன், வேல்ராஜ், முருகன், லிங்கசாமி, மாரிச்சாமி, நல்லையாராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: