பெண்ணிடம் நகை பறிப்பு

ராஜபாளையம், அக்.17: ராஜபாளையம் ஆவாரம்பட்டிையச் சேர்ந்த சின்னக்காளை மனைவி பழனியம்மாள் (55). மில் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அழகுத்தேவன்குளம் பகுதியில் டூவீலரில் வந்த 2 பேர், அவர் அணிந்திருந்த ஒன்றரை பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினர். அவர் அளித்த புகாரின்பேரில் ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: