ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், அக். 17: நிறுத்தி வைக்கப்பட்ட மருத்துவப் படியை உடனடியாக வழங்க வலியுறுத்தி, விருதுநகரில் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு, பிஎஸ்என்எல் அனைத்து இந்திய ஓய்வூதியர் சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் ஈஎல்யூ மாவட்ட தலைவர் ரவீந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், ‘பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட மருத்துவப்படியை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். பெருமாள்சாமி நன்றி தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: