புதுச்சத்திரம் அருகே லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து கண்டக்டர் பலி 6 பேர் படுகாயம்

சேந்தமங்கலம், அக். 17: புதுச்சத்திரம் அருகே, லாரி மீது அரசு பஸ் ேமாதியதில், கண்டக்டர் பரிதாபமாக உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து, மதுரை நாமக்கல் வழியாக அரசு பஸ் நேற்று முன்தினம் இரவு சேலத்திற்கு புறப்பட்டது. பஸ்சை மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் (45) என்பவர் ஓட்டினார். தேனி மாவட்டம் வீரபாண்டியைச் சேர்ந்த செல்லையா (55) கண்டக்டராக இருந்தார். பஸ்சில் மதுரை, சிவகாசியைச் சேர்ந்தவர்கள் உள்பட 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் மேம்பாலத்தில், முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது லாரியின் பின்பக்கத்தில் பஸ் மோதியது. இந்த விபத்தில் கண்டக்டர் செல்லையா உடல் நசுங்கி உயிரிழந்தார். இதில், 6க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: