குமுளி மலைச்சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்

கம்பம், அக். 17: குமுளி மலைச்சாலை பாதையை சீரமைக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்பத்தில் நடந்த தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.கம்பத்தில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட செயலாளர் தமிழ் ஜெய்லானி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், அடுத்த மாதம் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தில், குமுளிமலைச்சாலை பாதையை உடனடியாக சீரமைக்க வேண்டும். உத்தமபாளையம் வாரச்சந்தையில் மழைக்காலங்களில் குளம்போல் தண்ணீர் தேங்குவதை தடுத்து கடைகளுக்கு கட்டிடங்கள் கட்டித் தரவேண்டும். நியூட்ரினோ திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். கட்சியின் தலைவர் ஷெரீப் மீதும் கட்சியினர் மீதும் போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெறவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் அப்துல்அக்கீம், மாவட்ட துணைச் செயலாளர் பாண்டியன், பழனிபாபா பேரவை மாவட்ட செயலாளர் சிராஜூதீன், மருத்துவஅணி செயலாளர் முகமதுரபீக், புதுப்பட்டி பேரூர்செயலாளர் ஜெயசீலன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: