அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை பெரியகுளத்தில் லாரியில் இருந்த சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் திருட்டு ரூ.32 ஆயிரம் மதிப்புள்ளது

பெரியகுளம், அக். 17: பெரியகுளத்தில் லாரியிலிருந்து ரூ.32 ஆயிரம் மதிப்புள்ள சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் திருடுபோனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பெரியகுளம், வடகரையை சேர்ந்தவர் ஷம்சுல்ஷீதா (40). இவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த அக்.3ம் தேதி திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே உள்ள தாழையூத்து என்ற இடத்தில் இருந்து சமையல் எண்ணெய் பாக்கெட் அடங்கிய பெட்டிகளை லாரிகளில் ஏற்றிக்கொண்டு வந்தார். லாரியை அவரது லாரி ஷெட்டில் நிறுத்தியிருந்தார்.

இந்நிலையில் மறுநாள் காலையில் சென்று பார்த்தபோது லாரியின் மேல் விரிக்கப்பட்டிருந்த தார்ப்பாய் கிழிக்கப்பட்டு உள்ளே இருந்த சமையல் எண்ணெய் பாக்கெட் அடங்கிய 31 பெட்டிகள் திருடப்பட்டது தெரிய வந்தது.இதுகுறித்து ஷம்சுல்ஷீதா பெரியகுளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் 10 நாட்களுக்கு பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடுபோன எண்ணெய் பாக்கெட்டுகளின் மதிப்பு ரூ.32 ஆயிரமாகும்.

Related Stories: