அரூர், அக்.17: அரூர் பகுதியில் குரங்கு தொல்லை அதிகரிப்பால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் அரூர் திருவிகநகர், பெரியார் நகர், தில்லை நகர், பாட்சாபேட்டை மற்றும் பரசுராமன் தெரு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறும் குரங்குகள் கூட்டம் கூட்டமாக ஊருக்குள் புகுந்து வருவதால் மக்கள் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர். அவை வீட்டிற்குள் புகுந்து உணவு பொருட்களை சூறையாடி வருகிறது. மேலும், வீடுகளுக்கு செல்லும், மின்சார ஒயர், கேபிள்,