தூய்மை பணியை அதிகாரி ஆய்வு

கடத்தூர், அக்.17: தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே பசுவாபுர ஊராட்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிட்டிபாபு தூய்மைப் பணிகளை ஆய்வு செய்தார். குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை, நீரில் குளோரின் அளவு, நீர் மாதிரிகளை சேகரித்தல், துப்புரவு பணி, டெங்கு கொசு புழு அழித்தல், தூய்மை திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறைகள் முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா உள்ளிட்டவற்றை அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பழகன், மகாலிங்கம், ஊராட்சி செயலர் பட்டாபிதுரை, சுகாதார ஆய்வாளர் விஜய்ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: