தர்மபுரி, அக்.17: தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் நகராட்சி கடைகள் முன் நிற்கும் தள்ளுவண்டி கடைளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடை வாடகை தாரர்கள் நகராட்சி கமிஷனரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட ராஜகோபால் கவுண்டர் பூங்கா முன்புள்ள நகராட்சி கடை வாடகைதாரர்கள் நேற்று தர்மபுரி நகராட்சி கமிஷனர்(பொ) கிருஷ்ணகுமாரிடம் புகார் மனு கொடுத்தனர். அந்தமனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி நகராட்சிக்கு சொந்தமான ராஜகோபால் பூங்கா எதிரே உள்ள கடை எண் 5ல் இருந்து 14 வரை உள்ள கடைகளில், பல வருடங்களாக வாடகைதாரர்களாக இருந்து வருகிறோம். எங்களது கடைகள் முன் சாலையில் தள்ளுவண்டிகள் வைத்து சுகாதாரமின்றி உணவு வியாபாரம் செய்து வருகின்றனர்.