என்.சி.சி. மாணவர்களுக்கு மலையேற்ற பயிற்சி

தர்மபுரி, அக்.17: தர்மபுரியில் அரசு மற்றும் தனியார் கல்லூரி என்.சி.சி. மாணவர்களுக்கு மலையேற்ற பயிற்சி முகாம் நடந்தது. தர்மபுரி அரசு கல்லூரி மாணவர்கள் 100 பேர், ஜெயம் கல்லூரி மாணவர்கள் 30பேர் உள்பட மொத்தம் 130பேர் மலையேற்ற பயிற்சி முகாம் மூக்கனூர் மலையில் நடந்தது. என்.சி.சி. அலுவலர்கள் முருகன், விஜயதேவன் ஆகியோர் தலைமையில் மாணவர்கள் சுமார் 1,200 மீட்டர் உயரமுள்ள மலையை ஏறி பயிற்சி பெற்றனர். இதை தொடர்ந்து, மலையேற்ற பயிற்சியினால், மாணவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து முகாமில் எடுத்துரைக்கப்பட்டது.

Related Stories: